26 December 2013
உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
Do you like this story?
உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து
2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை
மதுரையில் இருந்து இராமேசுவரத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 6.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.
காலை 9 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை நிலையத்திற்கு ரெயில் வந்தது. அங்கு பயணிகள் இறங்கியதும், உச்சிப்புளி நோக்கி ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் உச்சிப்புளி கடற்படை விமான நிலையம் அருகே சென்றபோது, 3 மற்றும் 2 வயது குழந்தைகளுடன் வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென ரெயில் முன் பாய்ந்துள்ளார்.
இதில் ரெயிலில் அடிபட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த கார்டு, உச்சிப்புளி ரெயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை”
Post a Comment